குடும்பங்களுக்கு ரூ.5000 கொரோனா நிவாரண நிதி – இலங்கை அரசு அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை காரணமாக வருவாய் இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
நிவாரண நிதி:
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை தற்போது பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தடுப்பு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக இலங்கை முழுவதும் 1,89,241 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,527 பேர் உயிரிழந்துள்ளனர். தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,53,371 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் மருத்துவமனைகளில் 34,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன் படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரண நிதியானது, சரக்கு கப்பல் தீ விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? அரசு செய்ய வேண்டியது என்ன!
இதற்காக 30 பில்லியன் தொகையை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் வருவாய் இழந்த குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி இன்று (ஜூன் 2) முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண நிதியின் மூலம் தகுதியுடைய நபர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் கடந்த ஆண்டும் கொரோனா பரவலின் போது பலர் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், நிவாரண நிதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.