ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்திய அரசு – கொரோனா பரவல் எதிரொலி!

0
ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்திய அரசு - கொரோனா பரவல் எதிரொலி!
ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்திய அரசு - கொரோனா பரவல் எதிரொலி!
ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்திய அரசு – கொரோனா பரவல் எதிரொலி!

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக பிஜீங்கில் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு:

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவும் தன்மையை கொண்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கைகள் தினசரி அதிகரித்தது. இந்த வைரஸ் தொற்று மேலும் உருமாற்றம் அடைந்து பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகளும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டனர். நோய் தடுப்பு பணியாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் புதிதாக 9,000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

இதனால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நேரத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலை தூக்கியுள்ளது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதானல் அந்நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மேலும் ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவைகளை தொடர்ந்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் அதிகபட்சமாக பிஜீங்கில் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீஜிங்கில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!