அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இணையத்திற்கு அடிமையாவதை தடுக்க ஆலோசனை – தமிழக அரசு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இணையத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை:
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் அனைத்து துறைகள் மீதான பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகின்றது. தினசரி ஒவ்வொரு துரையின் சார்பில் விவாதங்கள் நடத்தப்பட்டு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் தெரிவிக்கப்படுகின்றது. இன்று சட்டப்பேரவையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 110 புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில், கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த 2400 செவிலியர்கள், 2448 சுகாதார ஆய்வாளர்கள், ரூ.17. 42 கோடி செலவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம் – அயர்லாந்து அரசு அதிரடி!
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் இந்திய முறை மருத்துவ மருந்துகளும் வழங்கப்படும். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும். ‘சற்றே குறைப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாடு படிப்படியாக குறைப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.35 கோடி செலவில் நிறுவப்படும்.
TN Job “FB Group” Join Now
முதல் முறையாக தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘அரிய வகை இரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு’ ரூ. 3.75 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். குழந்தைகள் இணையத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் மனநல நிபுணர் குழுவால் சிறப்பு ஆலோசனை வழங்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2020 ஜனவரி முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.