வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம் – அயர்லாந்து அரசு அதிரடி!
வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது நாட்டின் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக ரூ.1949 கோடி அபராதம் விதித்து அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அபராதம்:
வாட்ஸ்அப் என்பது மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவையாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்ஆப்பில் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.
சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – ரயில்வேதுறை அறிவிப்பு!
முன்னதாகவே பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை வாட்ஸ்அப் நிறுவனம் மற்றவர்களுக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து வந்தது. இந்நிலையில், அயர்லாந்து நாட்டில் பயனர்களின் தனியுரிமை தரவுகளை தவறாக கையாண்ட குற்றத்திற்காக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்துள்ளது. அதாவது 2018ம் ஆண்டு அயர்லாந்து நாட்டின் தரவு பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக வாட்ஸ்அப் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் வாட்ஸ்அப் குற்றம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அயர்லாந்து நாட்டின் தரவுகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு அறிவித்துள்ள அபராத தொகையை செலுத்தவும், பயனர்களின் தரவுகளை பாதுகாப்பை உறுதி செய்யவும் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அயர்லாந்து அரசின் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.