சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – ரயில்வேதுறை அறிவிப்பு!
ரயில்வே துறை சென்னை புறநகர் ரயில்களில் பயணிகள் பயணிக்க கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளில் தளர்வுகள்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால் பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசிய துறையினர் பயணிப்பதற்காக மட்டும் மிக குறைந்த எண்ணிக்கையிலான மின்சார ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு குறைந்து வந்ததால் தமிழகத்தில் ஜூன் 25ம் தேதி முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
நியூயார்க், நியூ ஜெர்சியில் அவசர நிலை அறிவிப்பு – அமெரிக்க இடா சூறாவளி!
இருப்பினும், ரயில்வே துறை நோய் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம், ஆண்கள் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையும் இரவு 7 மணி முதல் கடைசி ரயில் வரை பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே வளாகம் மற்றும் ரயில்களுக்குள் முகக்கவசம் அணியாமல் உள்ளவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது, ரயில்வேதுறை பயணிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்துள்ளது. முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடுகள் இன்றி பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரிட்டர்ன், சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும், டிக்கெட் வாங்கும் பொது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்து பயணிக்கலாம். மற்றவர்களுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.