மணிப்பூர் அரசு தங்களது ஊழியர்களை அரசு அலுவலங்களில் வேலைக்கு வர வைக்க கடும் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
இனி ஊதியம் கிடையாது:
மணிப்பூரில் கடந்த பல மாதங்களாக இரு பழங்குடியினர் சமூகத்திற்கும் இடையே கலவரம் வெடித்து வருகிறது. இதனை அரசு கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் இன்று அளவும் இதில் பிரச்சனைகள் தீர்ந்து பாடு இல்லை. இதனால் பல அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் சென்று பணி புரியாமல் உள்ளனர். அவர்களை பணிக்கு திரும்ப கொண்டுவரும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.
TNPSC Group 1 தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
அதன்படி அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தேவையின்றி விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது என அரசு திட்டமிட்டமாக தெரிவித்துள்ளது. ஊழியர்கள் பலர் வராததால் அரசு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், இனி வருகையை பதிவு செய்ய பதிவேட்டை பராமரிக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.