மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – அரசின் விளக்கம்!
இந்தியாவில் அரசு பணிகளில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு குடும்ப பென்சன்களை பெறுவது தொடர்பாக ஓய்வூதியதார்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக தற்போது மத்திய அரசு விளக்கங்களை கொடுத்துள்ளது.
ஓய்வூதியம்
இந்தியாவில் அரசு பணியிடங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் முதிர்வு காலத்தில் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். ஆனால் கடந்த 2004ம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய சிவில் பென்சன் பெறும் ஓய்வூதியதாரர்கள் தனித்தனியாக இரண்டு பென்சன் பெற முடியுமா என்ற கேள்வி ஓய்வூதியதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் புதிய திட்டம்!
இதற்கான தெளிவான விளக்கத்தை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, கடந்த 2012 செப்டம்பர் மாதம் வரை அமலில் இருந்த விதிமுறைப்படி ஓய்வூதியதாரர்களில் மத்திய சிவில் பென்சன் பெறுவோரால் இரண்டு பென்சன்களை பெற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது இரு வகையான பென்சன்களை மத்திய சிவில் ஓய்வூதியதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரே குடும்பத்தில் ஓய்வுபெற்ற மத்திய சிவில் பென்சனரும், இன்னொரு ராணுவ பென்சனரும் இருந்தால் இதில் ராணுவ பென்சன் மட்டுமே வழங்கப்படும்
Exams Daily Mobile App Download
இதையடுத்து சிவில் பென்சன் வழங்கப்படாது என்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதே போல் ஏற்கனவே குடும்ப பென்சன் பெற்று வரும் ஒரு குடும்பம் இன்னொரு குடும்ப பென்சன் பெற முடியாது என்ற கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டது. இந்த 2 கட்டுப்பாடுகளும் 2012 செப்டம்பர் 24ம் தேதி அன்று நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் 2 வகையான குடும்ப பென்சன்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி கடந்த 2012 செப்டம்பர் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய பென்ஷன் மற்றும் பென்சனர் நலத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.