தமிழகத்தில் 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து மிகவும் பொருளாதார பின்னடைவை அடைந்தனர். மேலும் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர முடியவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தகவல்களை திருத்துவது எப்படி? ஆன்லைன் செயல்முறைகள் இதோ!

இதில் வட்டார இயக்க மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட வகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணிக்கு ரூ.12000 முதல் ரூ.15000 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கரூர் என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பெற்று கொள்ள வேண்டும். அத்துடன் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 7ம் தேதிக்குள் மேலே குறிப்பிட்ட முகவரியில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/03/2022033071.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!