விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. எனவே பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி:
நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்ததன் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் முதல் OBC & UNI வங்கிகளின் செக் புத்தகங்கள் நிறுத்தம் – PNB அறிவிப்பு!
இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் நடத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பண்டிகை காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்தும், தெருக்களில் வைத்து விநாயகர் சிலைகளை வழிபடவும், அருகில் இருக்கும் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வேலை தேடுவோர் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை!
அதனை தொடர்ந்து டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர்வலம் முதலியனவற்றிற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. இருந்தும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்படவில்லை என்பதை மாவட்ட நீதிபதிகள் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள் உறுதி செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.