ஆன்லைனில் வேலை தேடுவோர் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை!
கொரோனா நேரத்தில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து, அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் பெயரில் பண மோசடி நடைபெற்று வருகிறது.
வேலைவாய்ப்பு எச்சரிக்கை:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. படித்த இளைஞர்களுக்கு அவர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலைகள் கிடைப்பதில்லை. இதனால் இளைஞர்கள் கிடைத்த வேலையை செய்ய வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள். சிலர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சில மோசமான இணைய செயலிகள் மூலம் ஏமாற்றம் அடைகின்றனர். கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமான மக்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களை குறித்து வைத்து பல டிஜிட்டல் தளங்கள் பண மோசடியில் ஈடுபடுகிறது.
தமிழக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லையா?
வேலையில்லா நபர்கள் வேலை பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் முழு விபரங்களையும் கொடுக்கின்றனர். இதை வைத்து மோசடி செய்யும் நபர்கள் வேலை தேடும் நபர்களின் தொலைபேசி எண்களை கைப்பற்றி அதன் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பெரிய நிறுவனங்களில் பணி வாங்கி தருவதாக ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று ஓடி விடுகின்றனர். மோசடி செய்யும் நபர்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். 1 ரூபாய் முதலீடு செய்தால் 100 ரூபாய் இலாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். மேலும் அமேசான், TCS போன்ற பெரிய நிறுவனங்களின் பெயர்களை கூறி ஏமாற்றுகின்றனர்.
தமிழக அரசில் ரூ.10,000 ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – நேரடி பணியமர்த்தல்!
மேலும் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாவும் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதை நம்பி ஒருவர் ஹீரோவாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வந்து தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் இழந்து தற்போது கடனாளியாக நிற்கிறார். வேலை தரும் பெரிய நிறுவங்கள் தங்கள் பணியாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிப்பது இல்லை. ஒருவர் வேலை வாங்கி தருவதாக உங்களை தொடர்பு கொண்டதால் முதலில் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். அவர்கள் கூறும் நிறுவனங்களில் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். தெரியாத யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற கூடாது.