இன்று முதல் அரசு, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – இரவு நேர ஊரடங்கு அமல்!
பீகாரில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வந்த காரணத்தினால் இன்று முதல் இரவு ஊரடங்குடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
பீகார் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு மே 5 முதல் அமல்படுத்தப்பட்டது. இதுவரை 4000க்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதனால் விதிக்கப்பட்ட தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே முழு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 92,596 பேருக்கு கொரோனா தொற்று – 2,219 பேர் பலி!!
அதன்படி பகல் நேர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் தனியார் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட்டு வந்த அரசு அலுவலகங்கள் தற்போது 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்த போதிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் வாகனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் எனவும், அதன் பின்னர் நீடிப்பது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.