இந்தியாவில் ஒரே நாளில் 92,596 பேருக்கு கொரோனா தொற்று – 2,219 பேர் பலி!!
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறைவாக பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 92,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கடந்த சில மாத காலமாக வேகம் எடுத்து வந்த கொரோனா நோய்த்தொற்று வீரியம் தற்போது சற்று குறைந்து வருகிறது. அதன்படி சுமார் 62 நாட்களுக்கு பின்பு ஜூன் 8 நிலவரப்படி தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டது. தற்போது இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1 லட்சத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பள பிடித்தம் – முதல்வருக்கு வேண்டுகோள்!
அதன்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 92,596 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,89,069 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு 2,219 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,53,528 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் தொற்றில் இருந்து 1,62,664 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் தற்போது வரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,75,04,126 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் தற்போது கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 12,31,415 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,90,58,360 ஆக அதிகரித்துள்ளது.
New
Leave