இங்கிலாந்து நாட்டில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை விதிக்கப்படுவதாக அரசு அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது.
செல்போன் பயன்பாடு:
உலகில் உள்ள பல நாடுகளில் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் மாணவர்களின் கல்வித் திறனில் அக்கறை கொண்டு பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஒரு சில கல்லூரிகளிலும் மொபைல் ஃபோன்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
TN TET தேர்வுக்கு தயாராக சூப்பர் வாய்ப்பு – முழு தகவல் இதோ!
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அரசு அதிரடி உத்தரவினை வெளியிட்டுள்ளது. அதாவது, பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறி மதிப்பெண் குறைவதால் பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்த தடை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.