தமிழகத்தில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகளில் வட்டி விகிதம்!
தற்போது பொருளாதார நெருக்கடியின் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக கொண்டே செல்கிறது. இருப்பினும் தங்க நகைகளை வாங்கி அதன் மூலம் நகைக்கடன் பெற பலர் முயற்சித்து வருகின்றனர். எனவே வங்கிகளில் நகை கடனுக்கான வட்டி விகிதம் குறித்து இப்பதிவில் காணலாம்.
நகைக்கடன் வட்டி விகிதம்:
இந்தியர்கள் மத்தியில் தங்கம் குறித்த மோகம் எப்போதும் குறைந்தது இல்லை. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடம் தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது தங்க நகைகள். பணம் வைத்திருப்பவர்கள் அதிகமாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 ஊக்கத்தொகை – யார் யார் பெறலாம்? முழு விபரங்கள் இதோ!
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்கம் வாங்குவது அவசர காலத்தில் நகைக்கடன் பெறுவதற்காக தான். அனைத்து வங்கிகளிலும் நகைக்கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான வட்டி வீதம் கணக்கிடப்படுகிறது. கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்த கால கட்டத்தில் பலரும் தங்களது நகைகளை வைத்து கடன் பெற்று வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தற்போது வங்கிகளில் நகைக் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஐசிஐசிஐ பேங்க் – 9% முதல் 19.76% வரை
- ஆக்சிஸ் பேங்க் – 13.50% முதல் 16.95% வரை
- ஹெச்டிஎஃப்சி பேங்க் – 11% முதல் 16% வரை
- கனரா பேங்க் – 7.35%
- முத்தூட் பைனான்ஸ் – 12% முதல் 26%
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – 7%
- கொடாக் மஹிந்திரா பேங்க் – 10% முதல் 17%
- இந்தஸ் இந்த் – 11.50% முதல் 16.00%
- மணப்புரம் பைனான்ஸ் – 29%
- பேங்க் ஆப் மகாராஷ்டிரா – 7.10%
- பஞ்சாப் நேஷனல் பேங்க் – 7.70% முதல் 8.75%
- பேங்க் ஆஃப் பரோடா – 9.00% முதல் 9.15% என்ற விகிதத்தில் வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.