தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 ஊக்கத்தொகை – யார் யார் பெறலாம்? முழு விபரங்கள் இதோ!

0
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 ஊக்கத்தொகை - யார் யார் பெறலாம்? முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 ஊக்கத்தொகை - யார் யார் பெறலாம்? முழு விபரங்கள் இதோ!
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 ஊக்கத்தொகை – யார் யார் பெறலாம்? முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மிகவும் பயனுள்ள இத்திட்டத்தில் எவ்வாறு சேருவது? அதற்கான நிபந்தனைகளை என்னென்ன? என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

அரசு ஊக்கத்தொகை:

தமிழக அரசு பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். அரசின் திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகள் இலவசமாக கல்வி பெறுகின்றனர். கல்வி பெறும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படும் தொகை வருங்கால மேற்படிப்பு, திருமணம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பேருதவி புரிகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ் – இனி நேரில் செல்லாமலே பொருட்களை வாங்கலாம்!

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் முதல் பிரிவின் கீழ், ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்துக்கு ரூ.50,000 உதவித்தொகையும், இரண்டாவது பிரிவின் கீழ், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு ஒரு குழந்தை தலா ரூ.25,000 வழங்கப்படும். பெற்றோர் இத்திட்டத்தில் டெபாசிட் செய்தது முதல் 5 வயது வரை குழந்தைக்கு மாதந்தோறும் 150 ரூபாய் உதவித்தொகையாக கிடைக்கும். மேலும் 18 வயது வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயனுள்ள இத்திட்டத்தில் மாவட்ட சமூக நல அதிகாரி, மாவட்ட திட்ட அதிகாரி, குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி, மற்றும் கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அதிகாரி போன்றவர்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் நிபந்தனைகள்:
  • இந்த திட்டத்தில் சேர விரும்பும் பெண் குழந்தைகளின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பெற்றோரில் ஒருவர் தங்களது 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
  • இத்திட்டத்தில் சேர விரும்புவர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது.
  • இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தைகளை தத்தெடுக்க கூடாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!