தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாக எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களது தேர்தல் பரப்புரையில் கூறிவருவதை அடுத்து, தி.மு.க செய்தித்தொடர்பாளர் இதற்கு பதில் அளித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள்:
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் இருந்து வரும் திமுகவினர், உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சியிலும் திமுக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் வந்தால் மட்டுமே அரசு மக்களுக்கு அளிக்கும் சலுகைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறிவருகின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் – கடைகள் வாயிலில் அறிவிப்பு பலகை! முக்கிய உத்தரவு!
முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றி வருகிறார். ஆனால் மற்ற எதிர்க்கட்சியினர் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை கையில் எடுத்துக் கொண்டு தங்களது பிரச்சாரத்தில் பேசி வருகின்றனர். அதிலும், குறிப்பாக கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கல் போன்ற குற்றம் சாட்டக்கூடிய விஷயங்களை பற்றியே பெரிதாக பேசி வருகின்றனர்.
Post Office இல் ரூ.63000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி கடைசி நாள்!
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த விஷயங்களை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளது குறித்து அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களையும் கூறியுள்ளார். இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்ற மகளிர் உரிமைத் தொகையை விரைவில் வழங்கப்போகிறோம். நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி தி.மு.க செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள், அரசு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முன்னதாகவே வெளியிட்டு விட்டது. அதற்கான சான்றிதழ்களை தான் தற்போது வழங்கி வருகிறோம். இவை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆகாது என்றும், குடும்பத் தலைவிகளுக்கான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நிச்சயம் தி.மு.க அரசு வழங்கும் என்றும், எதிர்க்கட்சிகளின் பொய்களை மக்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.