Post Office இல் ரூ.63000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி கடைசி நாள்!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு:
இந்திய அஞ்சல் துறை பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்திய அஞ்சல் மோட்டார் சேவைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அஞ்சல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டாப் கார் டிரைவர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை தகுதியான நபர்களை கொண்டு நியமிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – மாற்று திட்டம் ரெடி? நிதியமைச்சர் தகவல்!
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 56 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் மற்றும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் இப்பணியில் விண்ணப்பிக்கும் நபர் 3 வருட பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுபவருக்கு நிலை 2ன் படி ரூ.19900 முதல் ரூ.63200 வரை வழங்கப்படுகிறது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!
இதற்கு விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in/