தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் – கடைகள் வாயிலில் அறிவிப்பு பலகை! முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் சாமானிய மக்கள் ரேஷன் கடை மூலம் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நியாய விலை கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகை தொடர்பாக அனைத்து ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய உத்தரவு:
தமிழகத்தில் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. இந்த ரேஷன் கார்டு மூலம் நியாய விலைக் கடைகளில், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சிறப்பு திட்டத்தின் கீழ் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து பெறப்பட்டு விற்பனை செய்யும் கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்கள் தவிர தேயிலை, சோப்பு ஆகிய பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
Post Office இல் ரூ.63000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி கடைசி நாள்!
மேலும் ரேஷன் கார்டுகள் குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து, தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வகைகள் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்கள் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகளான கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவை நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசாணை எண் 162 படி நியாய விலைக் கடைகளில் வேலை நேரம் குறித்த பலகை, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கல் அளவு குறித்த பலகை, மாத ஒதுக்கீடு விவரம், பொருள் வாரியான நுகர்வு விவரம், பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரம் அறிவிப்பு பலகைகள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.
Post Office இல் ரூ.63000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி கடைசி நாள்!
ஆனால் ஒரு சில நியாய விலை கடைகளில் இதை பின்பற்றுவதில்லை. இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் உணவு பொருட்கள் வழங்கும் நாள் தெரியாமல் பலமுறை ரேஷன் கடைகளுக்கு சென்று காத்திருந்து நேரம் வீணாவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் நியாய விலை கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என உணவு வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.