தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – இறுதிப்பட்டியல் வெளியீடு!
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில், ஐந்து பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகள் பட்டியல் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பயன் பெறும் பயனாளிகள் இறுதிப்பட்டியல் தமிழக கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நிபந்தனைகள் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டது.
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 5 பவுனுக்கு மிகாமல் நகை அடகு வைத்திருந்ததில் தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற தொடங்கியது. இந்த நேரத்தில் நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் சான்றிதழ் வழங்கும் பணி தாமதமானது. அதன் பிறகு தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நகர்ப்புறங்களிலும் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகள் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
CBSE மாணவர்கள் கவனத்திற்கு – 10 & 12வது பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!
தேனி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, வேலூர் மாவட்ட தணிக்கை துறையை சேர்ந்த தணிக்கை அலுவலர்கள் 81 பேர் சேலம் மாவட்ட கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை துல்லியமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 91 சங்கம், வங்கியில் ஆய்வு முடிவடைந்துள்ளது. இன்னும், 224 சங்க பயனாளிகள் பட்டியல், அடுத்தடுத்து ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தமிழக கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அனுப்பப்படும் என்று சேலம் மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.