தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!
தமிழக அரசு விவசாயத்திற்காக 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் படி எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார் .
நகைக்கடன் தள்ளுபடி
தமிழக அரசு கொரோனா கால கட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக விவசாயத்திற்காக 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின் கடன் பெற்ற விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டமன்ற பேரவையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசுக்கு பரிந்துரை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
அத்துடன் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களுடன் விவசாயம் செய்ய நகைக்கடன் பெற்றிந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயம் சாராத கடன்களுக்கு தள்ளுபடி செல்லாது எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் வெளியாகியது. அதில் குறிப்பாக போலி நகைகளை கொண்டு கடன் வாங்குவது மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவது போன்றவை அடங்கும். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – ஆயத்த பணிகள் தொடக்கம்!
அதில் குறிப்பாக ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முறைகேடு ஏற்பட்டால் ஒரு மாவட்ட அதிகாரி மற்றொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. தற்போது விவசாயத்திற்கு மேலும் உதவி புரியும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றும் படி எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இவ்வாறு பல்வேறு தீர்மானத்தை நிறைவேற்றாமல் தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.