தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – காலக்கெடு முடிந்தவர்களிடம் அபராத வட்டி வசூல்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - காலக்கெடு முடிந்தவர்களிடம் அபராத வட்டி வசூல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - காலக்கெடு முடிந்தவர்களிடம் அபராத வட்டி வசூல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – காலக்கெடு முடிந்தவர்களிடம் அபராத வட்டி வசூல்!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் தாமதம் ஆகி உள்ளது. இதற்கிடையில் நகைக்கடன் பெற்றவர்கள் காலக்கெடு முடிவடைந்த நிலையில் அபராத வட்டி விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூட்டுறவு வங்கிகள்:

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் தங்களது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. அதனால் தள்ளுபடியை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். அதன்படி தமிழக அரசு பட்ஜெட் தாக்கலில் தள்ளுபடி குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளதால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தள்ளுபடி செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

தமிழக அரசு பணியில் புதிதாக சேர்பவர்களுக்கு நற்செய்தி – இனி சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி!

ஆனால் இதுவரை முறையான எந்தவொரு நிபந்தனைகளும் அறிவிக்கவில்லை. அதனால் நகைக்கடன் பெற்றவர்கள் தங்களது நகைகளை மீட்க சென்றால் தள்ளுபடி அறிவிப்பு வந்தவுடன் திருப்பி கொள்ளுங்கள் என்று அவர்களை வங்கி உறுப்பினர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். நகைக்கடன் பெற்றவர்களின் காலக்கெடு முடிவடைந்த நிலையில் தள்ளுபடியை எதிர்பார்த்து இருந்தனர். அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக புதிய நகைக்கடன் ஏதும் வழங்கப்படவில்லை. தற்போது காலக்கெடு முடிந்தவர்களிடம் நகைக்கடன் தொகையை செலுத்தி திருப்பி கொள்ளுங்கள் இல்லை என்றால் நகை ஏலம் விடப்படும் என நோட்டீஸ் அனுப்புகின்றனர்.

தமிழகத்தில் நாளை (அக்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பின்னர் நகையை திருப்ப சென்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி குறித்த நடவடிக்கை நிறுத்தி வைத்த 3 மாதத்திற்கும் சேர்த்து அபராத வட்டி செலுத்துமாறு கூறியுள்ளார்கள். இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் அரசு நகைக்கடன் தள்ளுபடி குறித்து தெளிவான நெறிமுறைகளை வெளியிட வேண்டும். மேலும் அரசு நிறுத்தி வைத்திருந்த காலத்திற்கு அபராத வட்டி விதிப்பதை நிறுத்த வேண்டும் என நகைக்கடன் பெற்றவர்கள் கூறுகின்றனர். இந்த மக்களின் கோரிக்கையை அரசு ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!