தமிழகத்தில் நாளை (அக்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் விபத்தை தடுக்கும் விதமாக மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளில் பழுதான கம்பிகள் மற்றும் கம்பங்கள் மாற்றப்பட்டு வருகின்றது. மேலும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகள் மேல் விழுவதனால் அந்த குறிப்பிட்ட இடங்களில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகள் எதிர்காலத்தில் மின்விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் நடைபெறுகின்றன.
Post Office அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள்!
பணிகள் மேற்கொள்ளும் ஊழியர்களின் நலன் கருதியே மின்தடை செய்யப்படுகிறது. அவ்வாறு மின்தடை ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் துணைமின் நிலைய செயற்பொறியாளர்கள் செய்தி மூலம் அறிவித்து விடுவார்கள். அதன்படி நாளை அக்.28ம் தேதி சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு PF வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும் – அரசாணை வெளியீடு!
இதனால் அலங்காநல்லூர், கோட்டைமேடு, கல்லணை, தேசிய சர்க்கரை ஆலை சாலை, 15பி மேட்டுப்பட்டி, குறவன் குளம், சிறுவலை, அம்பலத்தடி அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு சமயநல்லூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.