சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைப்பு – இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைந்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,688க்கு விற்பனையாகிறது.
தங்க விலை நிலவரம்:
தங்கத்தின் விலை எவ்வளவு தான் அதிகரித்தாலும், பெண்களுக்கு நகைகளின் மீதான மோகம் குறையாமல் உள்ளது. கடந்த மாதம் ஆடி என்பதால் விற்பனை சரிந்து தங்கத்தின் விலை சற்று குறைந்து ரூ.35 ஆயிரத்திற்கு சென்றது. அதனால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன் பின்னர் சிறிது நாட்களிலேயே தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.36 ஆயிரத்தை நெருங்கியது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.4,461க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,688க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமிற்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.66,700க்கு விற்பனையாகிறது. இதனால் தங்க நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் நகைக்கடை உரிமையாளர்கள், வியாபாரத்தில் தேக்கம் ஏற்படும். எனவே இந்த உத்தரவை நிறுத்த வேண்டும் என இன்று காலை 9 மணி முதல் 11.30 வரை கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். இந்த அறிவிப்பு காரணமாகவும் நகை விற்பனையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.