10ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்களின் தற்காலிக சான்றிதழ் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகியுள்ளது. இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வழிமுறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் பதிவிறக்கம்
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் விதிக்கப்பட்டுள்ள கொரோனா முழு ஊரடங்கு காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த முடியாத சூழல் உருவானது. இதை தொடர்ந்து 2020-21 ஆம் கல்வியாண்டில் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அம்மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை – முன்னாள் அமைச்சர் கோரிக்கை!
இதையடுத்து 9 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து, 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான புதிய மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பயன்பாட்டிற்காக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 23) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களது பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் தேவைப்படுகிறது. இதற்கிடையில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11, மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.