ஜீ தமிழின் ‘கோகுலத்தில் சீதை’ சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு – ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை தொடர் விரைவில் நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி திடீரென நிறைவடைவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோகுலத்தில் சீதை
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் முதலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் டிஆர்பியிலும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் அர்ஜூன் கதாபாத்திரத்தில் நந்தாவும் மற்றும் வசுந்தரா கதாபாத்திரத்தில் ஆஷா கௌடாவும் நடித்து வருகிறார்கள்.
முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
டிஆர்பியிலும் கோகுலத்தில் சீதை தொடர் முன்னிலையில் இருந்து வருகிறது. இப்படி மக்களின் மத்தியில் பிரபலமான கோகுலத்தில் சீதை தொடர் விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கு பதிலாக மற்றொரு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஏன் திடீரென்று சீரியலை பாதியிலேயே நிறுத்த வேண்டும் என ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டபடி இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும், அடுக்கடி பல சீரியல்களை விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் வேளையில் பாதியிலேயே சீரியலை நிறுத்துவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். உண்மையாகவே கோகுலத்தில் சீதை தொடர் நிறைவடைய போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், கோகுலத்தில் சீதை தொடர் நிறைவடைய போவதற்கான எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் புலம்பி தவித்து கொண்டிருக்கின்றனர்.