தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க இலக்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலக்கு நிர்ணயம்:
தமிழகத்தில் தாராபுரம் அருகே மூலனூர் வட்டாரத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் 225 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ. 54 லட்சம் மானியம் ஒதுக்கி இருக்கிறது. இது குறித்து மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ச. திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரைபட அனுமதியில்லாத பகுதியில் திட்டங்கள் ரத்து – அரசு உத்தரவு!
அதில் சொட்டு நீர்ப்பாசனம் அல்லது நுண்ணீர் பாசனம் என்பது முதன்மை குழாய், துணைக்குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். அதனால் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.