தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள் – காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விதித்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
எச்சரிக்கை :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அரசின் முயற்சியாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் ஓரளவு தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து நோய் பரவல் முழுமையாக குறையாத நிலையில் மாநில அரசுகள் முழு தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – TANUVAS அறிவிப்பு!
கூடுதலாக, விழா காலங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதித்துள்ளது. பொது இடங்களில் விநாயகரை வழிபடுவதற்கு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவர், இதனால் கொரோனா மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதால் அரசு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
T20 World Cup இந்திய அணி அறிவிப்பு – ஆலோசகராக தோனி நியமனம்! அஷ்வினுக்கு வாய்ப்பு!
மேலும் தனிநபர்கள் தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள கோயில்களில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட தேவையான பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசின் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.