தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – TANUVAS அறிவிப்பு!
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (செப்டம்பர் 9) முதல் தங்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) அறிவித்துள்ளது.
கால்நடை மருத்துவம்
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்திருப்பதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான பணிகளும் துவங்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று (செப்டம்பர் 9) முதல் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
இது தொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதன் கீழ் B.V.Sc மற்றும் B.Tech ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் இன்று (செப்டம்பர் 9) முதல் செலுத்தலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் திட்டம்?
அந்த வகையில் இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அக்டோபர் 8 ஆம் தேதி வரை செலுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.