ஜனவரி 31 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிபர் திடீர் விளக்கம்!
மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டு சீன நாட்டில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் தொற்று அந்நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு பணியாக முழு ஊரடங்கை விதிக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக ஓரளவு தொற்று பாதிப்புகள் குறைந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் பரவ தொடங்கியது.
பிப்.6 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
இந்த வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதி வேகமாக பரவி பாதிப்பு எணிக்கையை அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரன் வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனால் மீண்டும் உலக நாடுகள் ஊரடங்கை விதித்து வருகிறது. அந்த வகையில் மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த 2021 நவம்பர் மாதம் தொடர்ந்து 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
விதிக்கப்பட்ட கட்டுபாடுகளால் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும் விலக்கி கொள்ளப்பட்டது. பிப்ரவரி 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையெனில் உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் பார்களில் அனுமதி வழங்கப்படாது என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.