தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 1 முதல் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகையில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு,பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு போடப்பட்டுள்ளது.
அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த வகையில் நேரடி வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொது இடங்களில் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி குறைய தொடங்கின. இந்த வகையில் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கின. இந்த வைரஸ் சென்னையில் விமான பயணிக்கு முதலில் உறுதி செய்யப்பட்டது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – பிப்.15 முதல் நேரடி இலவச தரிசனம்!
இந்த நிலையில் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து ஒமைக்ரான் பரவல் தொடங்கி மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்தது. இதனால் முதல்வர் அதிரடி முடிவாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என அறிவித்தார். இதனை தொடர்ந்து இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவை அமலுக்கு வந்தது. இந்த பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிப்புக்கு தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. கொரோனா பரவல் குறித்து முதல்வர் தலைமையில் நேற்று முன் தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பிப்ரவரி 1 முதல் 1-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் மற்றும் கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் முழு ஊரடங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் அனைத்து வகையான பள்ளிகளும், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து விதமான ஆயத்த பணிகளையும் உடன் மேற்கொள்ளுமாறு அறிவருத்தப்படுகிறது.