பிப்.6 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு முன்னதாக விடுமுறை அளித்திருந்த நிலையில், தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் முதல் மற்றும் 2ம் அலை பாதிப்புகள் அதிக அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்க முடியாத காரணத்தால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்படையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதனால் கொரோனா 2ம் அலை முடிந்து மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியதும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு மீண்டும் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் மாநில வாரியாக பள்ளிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் மீண்டும் நேரடி வகுப்புகளை கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாத இறுதியில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனுடன் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிக வேகமாக பரவி வந்தது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிட்டு மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
உத்தரபிரதேசத்தில் முன்னதாக பள்ளிகள், கல்லூரிகள் ஜனவரி 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை மூட உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட பள்ளிகள் தடுப்பூசி முகாம்களை நடத்தும் என்றும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு, நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டாலும், உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.