மாநிலம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு மீண்டும் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளை (ஜன.30) ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கின் போது எவற்றுக்கெல்லாம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக காணலாம்.
முழு ஊரடங்கு
கேரளா மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா 3ம் அலைத்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் தற்போதுள்ள நோய் தொற்று நிலைமையை ஆய்வு செய்த அரசாங்கம், நாளை (ஜன.30) ஞாயிற்று கிழமையை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், ‘நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
குறிப்பாக மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் உரிய அனுமதியுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்தியாவசிய சேவைகளான பால், மருந்து, பத்திரிகை, இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் பழக்கடைகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம்.
மேலும் அவசிய பணிகளான காவல்துறை, தீயணைப்பு துறை, பத்திரிக்கை, சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்களது அனுமதி அட்டைகளுடன் பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து பத்திரிக்கை துறை, மருந்து கடைகள், டெலிகாம் மற்றும் இணைய அடிப்படையிலான பணிகள் முழு நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மருத்துவனைகளுக்கு செல்பவர்கள், தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு..!
ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுகிறது. தொலைதூர பேருந்து மற்றும் ரயில் பயணங்கள் ஊரடங்கு நாட்களில் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் பயணம் செய்பவர்கள் தங்களது டிக்கெட்களை உடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஊரடங்கு நாட்களில் பார்கள் மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.