நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!
கொரோனா பாதித்த மாநிலங்களில் அதிகமான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று மாநில தலைமை செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு:
இந்தியா முழுவதும் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கம் மின்னல் வேகத்தில் இருந்தது. இதனால் நாடு முழுவதும் தொற்று பாதித்த மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. மீண்டும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து துறைகளிலும் 50% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் திருத்தம்!
மீதம் உள்ளவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவுப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.மேலும் பொதுப் போக்குவரத்து, இரயில் சேவைகளில் கட்டுப்பாடுகள் இருந்தன. இதனை தொடர்ந்து வார ஊரடங்கு நாட்களில்,உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று ஓய்ந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கட்டுப்பாடுகளால் மக்கள் நகர்வு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் எந்த தடையும் இல்லாமல் இருப்பது அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.