Post Office இல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள கிராம சுரக்ஷா சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கிராம சுரக்ஷா சேமிப்பு திட்டம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் இணைந்து பயன்பெற்று வருகின்றனர். ஏனெனில் இதில் வங்கிகளை காட்டிலும் அதிகமான வட்டி தொகையை பெற முடிகிறது. அத்துடன் இந்த சேமிப்பு திட்டங்களில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
தமிழகத்தில் பிப்.19ம் தேதி பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை – அரசு உத்தரவு!
அதனால் பொதுமக்களிடையே இந்த சேமிப்பு திட்டங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தற்போது கிராம சுரக்ஷா சேமிப்பு திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது உடையவர்கள் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தில் sum insured அளவு 10,000 முதல் 10 லட்சம் ரூபாய் உள்ளது. அதனால் தங்களின் தேவைக்கேற்ப இதில் உள்ள அளவீட்டை தேர்வு செய்து கொள்ளலாம்.
Infosys நிறுவனத்தில் சுமார் 400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!
இந்த திட்டத்தில் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்று பிரீமியம் தொகையை செலுத்தலாம். இதில் 19 வயதுடைய நபர் 10 லட்ச ரூபாய் என்ற sum insured அளவீட்டை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு மாதமும் 1515 ரூபாய் செலுத்த வேண்டும். அதன்படி தினமும் 50 ரூபாய் சேமித்தால் போதுமானது. இதன் முதிர்வு காலத்தின் முடிவில் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு 31.60 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. மேலும் 5 வருடங்கள் நீட்டித்தால் முதிர்வு காலத்தின் முடிவில் 34.60 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.