இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா, மீண்டும் ஊரடங்கு? முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைவதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் 13ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதமர் ஆலோசனை:
இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 2 லட்சம் ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு மாநிலங்களான மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் புத்தாண்டு முதலே கொண்டாட்டங்களுக்கு தடை மற்றும் இரவு ஊரடங்கு என செயல்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்த வகையில் தமிழகத்திலும் வரும் ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் இரவு ஊரடங்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் ஜன.16 முதல் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் திடீர் விளக்கம்!
இந்த வகையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வரும் 13 ஆம் தேதி அன்று காணொலி முறையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் பொங்கல், மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகள் இன்னும் சில நாட்களில் நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளதால் தொற்று பரவல் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போதைய கொரோனா நிலவரம், தொற்று பரவல் தடுப்புக்காகவும் சிகிச்சைக்காகவும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தடுப்பூசி பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.