தமிழகத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தற்போது மதுபான கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுபான கடைகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி ஜனவரி 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் இந்நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் ஜன.16 முதல் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் திடீர் விளக்கம்!
முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் இயங்காது. அத்துடன் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை விதித்துள்ளது. மேலும் உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – பொங்கல் பரிசு கோரிக்கை!
இந்த அறிவிப்பின் படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ம் தேதியும், வள்ளலார் தினமான ஜனவரி 18ம் தேதியும், குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களிலும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் உள்ளிட்ட கடைகள் மூடப்படும். அத்துடன் இந்த விதியை மீறி மதுபான கடைகள் திறப்பது மற்றும் மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்வது உள்ளிட்டவற்றை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.