நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க நாட்டில் உருவான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முழு ஊரடங்கு
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முறையாக கண்டறியப்பட்டது. அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை கதி கலங்க வைக்கிறது. இதில் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
TCS நிறுவனத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!
இந்த ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை காட்டிலும் வேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க நாட்டில் ஒமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா வைரஸின் நான்காவது அலை பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த எந்தவித கட்டுப்பாடு விதிமுறைகளும் அமல்படுத்தப்படவில்லை. இது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு – வேலைக்கு செல்வதில் சிக்கல்!
இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மட்டும் பின்பற்றினால் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி விடலாம். அத்துடன் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால் பொருளாதாரமும், பொது மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற எந்தவித கட்டுப்பாட்டையும் அமல்படுத்த தயாராக இல்லை என்றும் தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இங்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 93 ஆயிரத்து 278 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.