தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு – வேலைக்கு செல்வதில் சிக்கல்!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற பொறியியல் மாணவர்கள், பணியில் சேர்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
தமிழகத்தில் மக்கள் வேலையின்றி தவித்து வரும் இந்த பேரிடர் காலத்தில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க பல நிறுவனங்கள் முன் வந்துள்ளனர். அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இறுதியாண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரியில் வளாக நேர்காணல் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்துள்ளனர். மற்ற ஆண்டுகளை தொடர்ந்து நடப்பாண்டும் வளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக ஆன்லைன் வாயிலாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கிடையாது – அமைச்சரவை முடிவு!
கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2022ம் ஆண்டு 40% வேலைவாய்ப்பு அதிகம் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. இதுவரை வளாக நேர்காணல் வாயிலாக, இறுதி ஆண்டு படிக்கும் 1,700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கணினி தொடர்பான நிறுவனங்கள், அதிக அளவில் மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து உள்ளதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடைபெறவிருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போவதால் தற்போது வளாக நேர்காணலில் தேர்வாகியுள்ள மாணவர்கள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மீண்டும் முறைகேடு? அடுக்கடுக்கான புகார்!
2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளே இன்னும் நடைபெறவில்லை. அதனை தொடர்ந்து தற்போது ஜனவரி 20ம் தேதி தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சரியான காலத்தில் பணிகளில் சேர முடியுமா அல்லது வாய்ப்பு பறிபோகுமா என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வை விரைந்து நடத்தி அவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.