இன்று முதல் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் திடீர் உத்தரவு!
சீனாவில், வைரஸ் பரவல் உயர்ந்து கொண்டே வருவதால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தீவு நாடான சமோவாவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்து உள்ளார். கொரோனா பரவல் குறையும் பட்சத்தில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு அமல்:
உலகத்தில் அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்று சீனாவின் வூகான் நகரில் முதன் முதலில் பரவத் தொடங்கியது. தொடர்ந்து இந்த நோய் பரவல் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பரவி அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவது உலக சுகாதார துறைக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலயில் சீனாவில், கடந்த மாதம் முதல் கொரோனா தினசரி பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதனால் வர்த்தக நகரமான ஷாங்காய் நகரில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அமலில் உள்ள கட்டுப்பாடுகளை மீறும் மக்களுக்கு கடுமையான தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் 2 லட்சம் பேர் வசித்து வரும் தீவு நாடான சமோவாவில், 2020 ம் ஆண்டு உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தபோதிலும், பாதிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. அந்த சூழலில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலேயே தொற்றுகள் அச்சுறுத்தி வந்த போது, முதல் முறையாக சமோவா நாட்டில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் ஓரளவு குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் வரும் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படுவதாக, சமோவா பிரதமர் ஃபியாம் நவோமி மாதாஃபா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த மாதத்தில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சர்வதேச பயணிகளுக்கு, தங்கள் நாட்டிற்கு வர அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை அடுத்து சமோவா நாட்டில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 92.6 % பேர் கொரோனா தடுப்பூசியின் 2 வது டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். அதே சமயம் மொத்தம் 70,439 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.