ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு, 3 வாரங்கள் பள்ளிகள் மூடல் – ஓமைக்ரான் எதிரொலி! பிரதமர் உத்தரவு!
தற்போது கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று பரவல் பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் ஜனவரி 14ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு விதித்து நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு உத்தரவு:
கொரோனா தொற்று பரவல் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் அவை நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவுமே தவிர, முழுமையாக தடுக்கும் என்று கூற முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறினர். இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் மற்ற நாடுகளுடனான போக்குவரத்து முதற்கொண்டு அனைத்தும் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து எடுத்து வந்த நடவடிக்கைகளின் விளைவால் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் டிச.31 முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – சுற்றுலா தலங்கள் மூடல்!
ஆனால் அடுத்தபடியாக அச்சத்தை அளிக்கும் வகையில், தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து புதியதாக கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. இதனால் தற்போது மேலும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் நவம்பர் 28 ஆம் தேதி முதல் உணவகங்கள், பொது இடங்கள், திரையரங்குகள் போன்றவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் மற்றும் பண்டிகைகள் வர உள்ளது.
சென்னை GST அலுவலகத்தில் ரூ.80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – டிச.31 கடைசி நாள்!
இதனால் நோய் பரவல் அபாயம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த பிரதமர் மார்க் ரூட்டே ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வரை நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் போது, கிறிஸ்துமஸ் நேரத்தில் பொது மக்கள் எதிர்பார்த்த செய்தி இது அல்ல. புதிய வகை வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதித்து வருவதால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார விடுமுறை , மூன்று வாரங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அரசு தற்போது அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நெதர்லாந்து மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.