தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – வாரத்தில் இரண்டு நாள் முழு ஊரடங்கு! அரசு திட்டம்?
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுவதற்காக ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து சனிக்கிழமையும் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்றாம் அலை கொரோனா பரவல் தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ நெருங்கி விட்டது. அதனால் முதல்வர் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன் படி தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் இரவு 10 மணி வரை காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2 வாரமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசின் உத்தரவை எதிர்த்து பெற்றோர்கள் கோரிக்கை!
அதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டுகளாக உணவகங்கள், திரையரங்குகள் போன்றவற்றில் 50% பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் அமலில் உள்ள போது நோய் பரவல் குறைந்தபாடில்லை. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யபடுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – ஜன.24ம் தேதி நேர்காணல்!
இதனால் தடுப்பு பணியாக ஞாயிற்று கிழமையை தொடர்ந்து சனிக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதாக தகவல்கள் வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. அதனால் சனிக்கிழமையும் ஊரடங்கு விதிக்கப்பட்டால் மேலும் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தை நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.