தமிழகத்தில் பிப்.19க்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு? வெளியான ஷாக் தகவல்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கடந்த மாத துவக்கத்தில் பேரலையாக உருவெடுத்த கொரோனா தொற்று காரணமாக தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தடுக்கும் விதமாக ஜனவரி 6ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இம்முறை முழு முடக்கம் என்றளவில் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்காக மட்டும் கடைபிடிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நேரடி முறையில் தேர்வு! முழு விபரம் இதோ!
இதன் மூலம் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 31ம் தேதிக்கு பின்னர் வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட துவங்கி இருக்கிறது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போதைய கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 12 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருக்கிறது. இப்போது, கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
5 வது முறை உலக கோப்பையை வெல்லுமா இந்திய U19 அணி? இன்று பைனலில் இங்கிலாந்துடன் மோதல்!
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இப்படி இருக்க தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளது. அதாவது, தேர்தலை கருத்தில் கொண்டு தான் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. என்றாலும், இப்போதைய சூழலில் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து செயல்பாடுகளும் வழக்கமான நிலைக்கு திரும்பி இருக்கும் வேளையில் முழு முடக்கம் எனும் செய்தி பொது மக்கள் மத்தியில் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.