தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசின் முடிவு என்ன? முழு விளக்கம் இதோ!
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பேரலை தொற்றை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு முடிவு செய்யாதது பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தற்போது ஒமிக்ரான் மற்றும் கொரோனா பேரலை தொற்றானது அதி தீவிரமாக பரவி கொண்டிருக்கிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வரை கொரோனா தினசரி பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையானது கொரோனா முதல் மற்றும் 2ம் அலை ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டதை விட சற்று அதிகமாகும்.
மாநிலத்தில் பொங்கல் விடுமுறை மாற்றி அறிவிப்பு – தமிழக முதல்வர் கோரிக்கை எதிரொலி!
இப்போது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி 6ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என்பது மக்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஆனால் கொரோனா முதல் மற்றும் 2ம் அலையின் போது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அரசிற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு மீண்டும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து நடைபெற ஆலோசனை கூட்டத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதனால் தான் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகை! இன்றே கடைசி நாள்!
இப்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மக்கள் முக கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்புகளை கையாள வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுவே மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுனர்களின் கருத்தாகவும் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்கிற நிலையே நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.