மாநிலத்தில் பொங்கல் விடுமுறை மாற்றி அறிவிப்பு – தமிழக முதல்வர் கோரிக்கை எதிரொலி!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் விடுமுறை:
தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஜனவரி 14ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இக்கு தனால் வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று நாட்களுக்கு அரசு முன்னதாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 17ம் தேதியும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் – அரசாணை வெளியீடு!
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொங்கல் பண்டிகை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகை! இன்றே கடைசி நாள்!
முன்னதாக கேரளா மாநிலத்தில் ஜனவரி 15ம் தேதி அன்று பொங்கல் பண்டிகை அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் முக்கிய பொங்கலானது ஜனவரி 14ம் தேதி அன்று தான் சிறப்பிக்கப்படும். இது குறித்து தமிழக முதல்வர் கேரளா முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார். முதல்வரின் கோரிக்கையின் பேரில் ஆலோசிக்கப்பட்டு தற்போது ஜனவரி 14ம் தேதி கேரளா மாநிலத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை அளித்து முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.