தமிழகத்தில் ஜன.17 முதல் முழு ஊரடங்கு அமல்? வைரலாகும் தகவல்! உண்மை நிலவரம் என்ன?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உண்மை நிலவரத்தை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பியது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் பரவல் இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசின் முடிவு என்ன? முழு விளக்கம் இதோ!
இருப்பினும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கிற்கு பதிலாக இரவு ஊரடங்கு, வார இறுதி பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் இத்தகைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்து உள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் பொங்கல் விடுமுறை மாற்றி அறிவிப்பு – தமிழக முதல்வர் கோரிக்கை எதிரொலி!
10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொங்கலுக்கு (ஜன.16) பிறகு முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. இதில் உண்மைத்தன்மை இல்லை என அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் தொடர் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.
தயவுசெய்து முழு ஊரடங்கு போடுங்கள்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது
குழந்தைகள் படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதவிட அவர்கள் உயிர் மிகவும் முக்கியம்
Online வகுப்பு கூட நடத்துங்கள்,
முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வகுப்பு வரைக்கும் online வகுப்பு நடத்துங்கள்
ஐயோ முழு ஊரடங்கு போட வேண்டாம் தொழில் நிலைமை மிகவும் மோசமாகி விடும் முழு ஊரடங்கு போட்டால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கு சம்பளம் இல்லை என்று சொல்லுங்கள்