மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
நாடு முழுவதும் படிப்படியாக அதிகரித்து வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஓமைக்ரான் தொற்று அதிகரிப்பதன் அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று இதுவரை தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 34க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் இம்மாவட்ட பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – 11ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி!
அந்த வகையில் இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஓமைக்ரான் தொற்று பரவல் உள்ள வேறு நாடுகளில் இருந்து வந்த அனைவரையும் பரிசோதனை செய்ததன் மூலம் இதுவரை 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தற்போது ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி! நிபுணர்கள் கூறுவது என்ன?
மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பதன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது பரிசோதனையில் 1000 பேரில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் முதல் கட்ட கட்டுப்பாடு விதிக்கப்படும். அதே போல் 1000 பேரில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் 2ம் கட்ட கட்டுப்பாடு விதிக்கப்படும். அதுவே 1000 பேரில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் ரெட் அலெர்ட் விடுக்கும் விதமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.