தமிழகத்தின் இம்மாவட்ட பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – 11ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி!

0
தமிழகத்தின் இம்மாவட்ட பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு - 11ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தின் இம்மாவட்ட பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு - 11ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தின் இம்மாவட்ட பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – 11ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி!

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது அனைத்து வகுப்பினருக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அரசும், பள்ளிக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி! நிபுணர்கள் கூறுவது என்ன?

மேலும் பள்ளிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமெடுத்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவி உள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் இதுவரை 2 பெருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று விரைவில் பரவ கூடிய தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சென்னை: தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.64 குறைவு – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இதனால் தமிழகம் முழுவதும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. தற்போது சேலம் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடியும் வரை பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!