இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி! நிபுணர்கள் கூறுவது என்ன?
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மீண்டுமாக நாடு தழுவிய முழு முடக்கம் அவசியமா என்பது குறித்து நிபுணர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஒமிக்ரான் வைரஸ்
உலகம் முழுவதும் இதுவரை பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த டெல்டா வேரியண்ட்டை விட தற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதிய வேரியன்டான ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என கூறப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு பல்வேறு உலக நாடுகளை தற்போது ஆட்டி படைத்தது கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் சுமார் 21 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸ் வகையான ஒமிக்ரான் பரவல் காரணமாக மக்கள் மத்தியில் பயமும் அமைதியின்மையும் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு நாளும் ஒமிக்ரான் மாறுபாடு குறித்து புதிய செய்திகள் வெளிவரும் போது, இந்தியாவுக்கு மற்றொரு முழு ஊரடங்கு தேவையா அல்லது இரட்டை தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் அவசியமா என்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்கள் இப்போது கணித்து வருகின்றனர். இது குறித்து தொற்று நோய் நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா கூறுகையில், ‘தடுப்பூசி நிச்சயமாக எந்த மாறுபாட்டிற்கும் எதிராக பாதுகாக்கிறது.
அதாவது தடுப்பூசி போடப்படாத நபரை விட தடுப்பூசி போடப்பட்டவர் பாதுகாப்பானவர். இருப்பினும், முழுமையான பாதுகாப்பிற்காக இரண்டு அளவுகளையும் எடுக்க வேண்டியது அவசியம். நாட்டில் இன்னும் 15% பெரியவர்கள் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் முந்தைய டெல்டா வேரியண்ட்டை விட புதிய வேரியன்டான ஓமிக்ரான் மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.
தவிர தடுப்பூசி போடப்பட்டவர்களையும் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு குறித்து பேசிய வைராலஜிஸ்ட் டாக்டர் தீபக் ஆச்சார்யா, ‘ஒமிக்ரானை சமாளிப்பதற்கான ஒரே வழி லாக்டவுன் அல்ல. மக்கள் தனிப்பட்ட முறையில் தங்களைத் தாங்களே விழிப்புடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். லாக்டவுனை விட சுய கட்டுப்பாடு வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்’ என்று கூறியுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3,000 – அரசுக்கு கோரிக்கை!
தொடர்ந்து கொரோனா பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் ராகுல் பண்டிட் கூறுகையில், ‘கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரானால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. இந்த வைரஸை சமூகத்தில் பரவாமல் தடுக்க முடியும். இந்த ஆபத்தை தவிர்க்க எப்போதும் மாஸ்க் அணியுங்கள். வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் இரட்டை மாஸ்க் கூட அணியலாம். இது தவிர தடுப்பூசி போடாதவர்கள், விரைவில் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.