மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் – மறுஉத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு!

0
மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் - மறுஉத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு!
மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் - மறுஉத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு!
மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் – மறுஉத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு!

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. அதனால் மறுஉத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

முழு ஊரடங்கு:

உலகின் பல்வேறு நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா தொற்று முதன் முதலாக சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அமேரிக்கா, பிரிட்டன், இத்தாலி, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அடியெடுத்து வைத்து தீவிரமாக பரவியது. இத்தகைய பெருந்தொற்று பரவலால் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பொருளாதார நிதி நெருக்கடியும் நிலவியது குறிப்பிடத்தக்கது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

அதனை தொடர்ந்து கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட பின்னரே கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் உருமாறிய கொரோனா வகைகளாக ஒரு சில கண்டறியப்பட்டன. தற்போது அனைத்து நாடுகளிலும் தொற்றுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விரைவில் தொடங்க உள்ள நிலையில் அந்நாட்டின் ஷாங்சி மாகாணத்தின் தலைநகரான ஷியானில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசியம் இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றுக்கு எதிராக ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரைக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் ஓமைக்ரான் பரவலை தடுக்க தீவிர கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 2 லட்சத்து 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்து 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அங்கும் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள பாக்ஸ்லோவிட் (Paxlovid) கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. விரைவில் அங்கும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!