நாட்டில் ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு?

0
நாட்டில் ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் எடுக்கப்போகும் முடிவு?
நாட்டில் ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் எடுக்கப்போகும் முடிவு?
நாட்டில் ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு?

உலகம் முழுவதும் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய வகையான “எக்ஸ்இ” வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நெதர்லாந்து நாட்டில் குளிர் காலம் தொடங்க உள்ளது. அத்துடன் குளிர் காலத்தில் 1 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

முழு ஊரடங்கு

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் கொரோனா பெருந்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளும் செலுத்தப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து மேலும் வேகமாக பரவ கூடிய வைரஸ் தொற்றாக உருமாறுகிறது. தற்போது கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸின் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

மே 1 முதல் ஆட்டோ, பேருந்து கட்டணங்கள் உயர்வு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!

ஆனால் இப்போது ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய வகையான “எக்ஸ்இ” வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை குளிர் காலம் நிலவும். அதனால் இந்த குளிர் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 கோடியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் கூறியதாவது, குளிர்காலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஏப்ரல் 30ம் தேதி வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இதனை பொதுமக்கள் கட்டாயமான முறைகள் பின்பற்ற வேண்டும். அப்போது தான் கொரோனா மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும். மேலும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்கும் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதனை தொடர்ந்து கொரோனா தற்போது பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!